உலகம் காணாத தலைவரே எமது தமிழ் மக்களுக்கு கிடைத்த தலைவர்

23 11 2011

இதுவரை உலகம் காணாத தலைவரே எமது தமிழ் மக்களுக்கு கிடைத்த தலைவர், வேறு எந்த இனத்திற்கும் கிடைக்கா பொக்கிஷம். யார் யாரோ எல்லாம் தன்னைத் தானே தலைவன் என்று சொன்ன போது. உலகே வியந்து பார்க்கும் எம் தலைவர் சொன்ன ஒரு வாக்கியம், என்னை ஒரு பொழுதும் தலைவனாக நான் நினைத்ததில்லை, என் இனத்திற்கு என்னால் முடிந்த எனது கடமையை செய்கிறேன் என்று சொன்னவர், தன்னை எப்பொழுதும் ஒரு போராளியாகவே அறிமுகப் படுத்துபவர்.

எமது மக்கள் படும் துன்பம் தாங்காமல் விளையாடும் வயதிலே களமாடப் புறப்பட்டவர், களமாடப் புறப்படும் முதல் விளையாட்டுக்கு கூட ஒரு நண்பனையும் தள்ளி விடாதவர்;. மலரினும் மெல்லிய மனம் படைத்தவர், சாதுவாய் இருந்தவர் மிரண்டார் சுருண்டது கொடிய சிங்களம். போராடப் புறப்படும் கணமே தீர்க்க தரிசனமான முடிவை எடுத்தார்; எம் தலைவர்;, எவரையும் நம்பிப் பயன் இல்லை. தன் கையே தனக்குதவி என்று. தன் கையில் இருந்த மோதிரத்தை விற்றும் சிறுக சிறுக உண்டியலில் பணம் சேர்த்தும் வாங்கினார்; முதல் ஆயுதம்.எமது எதிரியை விட துரோகியே முகவும் கொடியவன் என அன்றே முடிவெடுத்த தலைவர், முதல் முதல் களை எடுத்தது எமது இனத் துரோகியை. அன்றில் இருந்து சிறுக சிறுக தன்னோடு நண்பர்களையும் சேர்த்து சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார்.

பாதியில் வந்தவர்கள் பலர் பாதியிலே போக தான் கொண்ட லட்சியத்தில் உறுதியாய் நின்றவர். தமிழீழ விடுதலைப் புலிகள் என் தனது அமைப்பிற்கு பெயர் சூட்டினார். அமைப்பில் இருப்பவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க தமது அமைப்புக்கென ஒழுக்க விதிகளையும் விதித்தார். தனது வாழ்வில் தான் ஒழுக்க சீலரகவே வாழ்கின்றார்.எமது இன விடுதலைக்காக போராட வரும் போராளிகள் உருதியானவர்களாக இருக்க பயிற்சி கொடுத்து. அவர்களின் நெஞ்சில் விடுதலை வேட்கையை மேலும் மெருகூட்டினார். தாய்த் தமிழுக்காய் எக்கணமும் களப் பலியாக துணிந்த போராளிகளை உருவாக்கினார், களமாடத் துணிந்த ஒவ்வொரு நெஞ்சங்களின் கழுத்திலும் நஞ்சை அணிவித்து தானும் அணிந்துகொண்டார். விடுதலை அமைப்பின் ரகசியங்களைக் காக்கவும் கொடிய சிங்களத்தின் கொடிய சித்திரவதைகளில் இருந்து தம்மைக் காகவே நஞ்சை அணிந்தனர்.

பல வல்லாதிக்க சக்திகள் எமது போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த போதும், எமது போராட்டப் பாதையை மற்ற எத்தனித்த போதும், தமிழ் மக்களின் விடிவுக்கான விடுதலைப் போரை விட வேறு எந்த வழியும் மக்களுக்கு விடிவைத் தராது என அன்றே தரிசனமான முடிவை எடுத்தார் தலைவர். வல்லாதிக்க சக்திகள் பல அழுத்தங்களைக் கொடுத்த போதும் , பல இடையூறுகளை விளைவித்த போதும் வளைந்து கொடுக்காமல் துணிந்து நின்றவர் எம் தலைவர். இதை பொறுக்காத அணிய சக்திகள் போராளி அமைப்புக்களை தூண்டிவிட்டு பிளவுகளை ஏற்ட்ப்படுத்தியது அப்போதும் கலங்காமல் களமாடினர் எம் தலைவர்.எமது இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை அழிக்க இரண்டு இலட்சம் ராணுவத்தை அனுப்பியது இந்தியா. இரண்டு இலட்சம் ராணுவம் இரண்டு வருடங்கள் களமாடி தமது இரண்டாயிரம் ராணுவத்தை இழந்தபோதும் எதவும் முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது இந்திய ராணுவம்.எமக்கென தனியான அரசாங்கத்தை அமைத்தார் எம் தலைவர்.

எமது தமிழ் ஈழத்தின் வளங்களை வளர்க்கவிவசாய திணைக்களம்,எமது மக்களின் வாழ்வை முன்நெடுக்க தமிழீழ வைப்பகம்,
மக்களுக்கான கைத்தொழில் உதவி,சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தமிழீழ காவல்த் துறை,தமிழீழ நீதி மன்றம் தமிழீழ சட்டக் கல்லூரி,போக்கு வரத்து திணைக்களம்,
வனவளத்துறை,கால் நடை வளர்ப்பு,மீன் வளத் துறை,ஆனையிறவு உப்பளம் என அனைத்து வழிகளிலும் ஈழத்தின் செல்வங்களை மக்களுக்கு பயன் உள்ளதாக மாற்றி ஈழத்தை வளர வைத்தார்.காந்தரூபன் அறிவுச்சோலை,செஞ்சோலை சிறுவர் இல்லம்,முதியவர் காப்பகம்,அமைத்து எம் பிஞ்சுகளையும், முதிர்ந்த எமது தாய் தந்தையரையும் கண்ணுக்குள் வைத்துப் பார்த்தார்.

எமது தலைவர் சக போராளிகளை அண்ணனாகவும் தம்பி யாகவும் தங்கையாகவும், பிள்ளைகளாகவும் பார்த்தார். ஒவ்வொருவரை தனது தாய் தந்தை பிள்ளைகளாகப் பார்த்தார், அவர்களின் விடுதலைக்காய் தனது தாய் தந்தையை பிரிந்து பல ஆண்டுகள் வாழ்ந்தார். உறங்கும் நேரம் கூட கண்களை மூடிக்கொண்டு விடுதலையை மட்டுமே சிந்தித்தார்.உலகே எம்மை ஏமாற்றி வார்த்தைகளில் மாத்திரம் மனித உரிமை. சிறுவர் பாதுகாப்பு பேசிக்கொண்டு, சிங்களத்தின் கொடிய யுத்ததிற்கு துணை போனது. எமது மக்களை சிங்களத்தோடு சேர்ந்து கொன்றொழித்தது.

மக்களைக் காக்க வேறு வழி இன்றி புலியாய்ப் பாய்ந்த எமது தலைமை பதுங்கியது. பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என கொட்டம் அடித்து எமது மக்களைக் கொண்றொளித்த சிங்களம் எஞ்சி இருந்த மக்களைக் கொள்ள முடியாமல் தவித்தது, சரணடைய போகின்றோம் என சர்வதேசத்திடம் சொல்லிச் சென்றவர்களை ஏமாற்றி சமாதான பறவைகளைக் கொன்றது. மக்களைக் காக்க வேறு வழி இன்றி ரத்தம் கொதித்த போதும் மௌனம் காத்தது எமது தலைமை.மௌனம் காக்கும் தலைமை உறங்கவில்லை. மௌனித்த துப்பாக்கிகள் மரணிக்கவில்லை, எமது தலைமையின் வழிகாட்டலுக்கு இன்றும் காத்திருக்கிறது எமது படை. விடுதலை பெரும் நாள் வரும். சாதாரன பிறப்புக்களே அழியும் எமது தலைவர் ஓர் அவதாரம் அவதாரங்கள் அழிவதில்லை. புலம் பெயர் தமிழர்களே புறப்படுங்கள் எமது தேசியத் தலைவரின் கீழ் மீண்டும் புத்துயிருடன் போராடத் தயாராகுங்கள்.


செயல்கள்

தகவல்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s




Follow

Get every new post delivered to your Inbox.